இறைவனின் திருப்பெயரால்....

Pages

Showing posts with label தடை. Show all posts
Showing posts with label தடை. Show all posts

Friday, July 2, 2010

பிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு! கொந்தளித்தது மும்பை!


பிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டனில் மூன்று இடங்களில் நடக்கவிருந்த இஸ்லாம் தொடர் பான கருத்தரங்குகளில் கலந்து கொள்ள ஜாகிர் நாயக் கடந்த வாரம் பிரிட்டன் செல்லவிருந்த நேரத்தில் அவரது விசா தடை செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தெரசா மே அறிவித்தார். ஜாகிர் நாயக்கின் பேச்சுகள் பொது ஒழுங்குக்கு ஏற்றதல்ல என்றும் அவர் குறிப் பிட்டார்.


ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை வளர்க்க உதவி செய்வதாக ஒரு கடுமையான, மேம்போக்கான குற்றச்சாட்டையும் பிரிட்டன் உள் துறை, ஜாகிர் நாயக் மீது சுமத்தி யுள்ளது.


இதைக் கடுமையாக மறுத்துள்ள ஜாகிர் நாயக், தான் இதற்கு முன் பல தடவை பிரிட்டனுக்கு வந்துள்ளதாகவும், தான் இம் முறை கலந்துகொள்ள இருக்கும் கூட்டங்கள் குறித்த விளம்பரங் கள் அதிக அளவில் பிரபலமடை ந்துள்ளதால் தனக்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், இதனாலேயே புதிதாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசு தன்னை வெளியேற்ற ஆணை பிறப் பித்துள்ளதாகவும் கூறினார்.


ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் விதித்துள்ள தடைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டன த்தைத் தெரிவித்து வருகின்றனர். மும்பை ஆசாத் மைதானம் அருகே பல்வேறு முஸ்லிம் அமை ப்புகளைச் சேர்ந்தவர்களும் திர ண்டு ஜாகிர் நாயக்கிற்கு எதிரா னத் தடையைக் கண்டித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மும்பையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி, ஜம்மியத்துல் உலமா ஹிந்த் உள் ளிட்ட 40 அமைப்புகள் பங் கேற்றது மஹாராஷ்டிராவில் திருப் புமுனையை ஏற்படுத்தியுள்ளது. சமுதாய ஒற்றுமைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந் திருப்பதாக முஸ்லிம்கள் மகிழ்ச் சியடைந்துள்ளார்கள்.


இதுதொடர்பாக ஜாகிர் நாயக் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பும் மும்பையில் நடைபெற் றது. அதில் பேட்டியளித்த ஜாகிர் நாயக், சட்டரீதியாகத் தான் இந்தத் தடையை சமாளிக்கும் அதேநேரத்தில் இந்திய வெளியு றவுத்துறை அமைச்சகமும் இதில் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தனது பேச்சை தவ றாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்ற நாயக், 2008&ம் ஆண்டு பிரிட்டன் தனக்கு ஐந்து வருட விசா வழங்கி உள்ளதையும் குறிப்பிட்டார். இது சட்டரீதியாக எடுக்கப்பட்ட முடிவல்ல, அரசி யல் ரீதியாக எடுக்கப்பட்ட ஒன்று என்றும், இந்தத் தடைக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.



"எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்பு ஜாகிர் நாயக்கிற்கு விதிக் கப்பட்ட தடை நியாயமற்ற ஒன்று. இதுவும் ஒருவகையான தீவிர வாதம்தான்" என்கிறார் மும்பையின் பிரபல வழக்கறிஞர் மஜீத் மேமன்.



ஜாகிர் நாயக்கிற்கு தடை விதித் து தன் மீது களங்கத்தை ஏற் படுத்திக் கொண்டுள்ளது பிரிட்டிஷ் அரசு. உடனடியாக இத்தடையை நீக்கி இஸ்லாமியப் பிரச்சாரகரும் மனித நேயவாதியுமான ஜாகிர் நாயக்கை பிரிட்டனுக்குள் அனுமதிக்க வேண்டும். நாகரீக பண்பு உள் ளவர்களாகக் கூறப்படும் பிரிட்டிஷ் மக்கள் இதற்கு குரல்கொடுக்க வேண்டும்.

-இப்பி பக்கீர்