இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link
A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Friday, November 9, 2012

சான்டி போன கையோடு அமெரி்க்காவைத் தாக்கிய ஏதேனா புயல்: 1,700 விமானங்கள் ரத்து

நியூயார்க்: சான்டி புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மையம் கொண்ட சான்டி புயல் கடற்கரையோர நகரங்களை நிர்மூலமாக்கியது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் நகரங்களுக்குள் புகுந்து தலைகீழாகப் புரட்டிப் போட்டதால் நியூயார்க், நியூஜெர்ஸி மாகாணங்கள் வெள்ளக்காடாகிவிட்டன. அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது.
ஏதேனாவால் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியில் கனமழை, பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன் பலத்த காற்றும் வீசுகிறது. இந்த புது புயலால் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன. அடுத்த 2 நாட்களில் ஏதேனாவால் கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும், நியூ இங்கிலாந்து பகுதியில் 6 முதல் 10 இன்ச் அளவுக்கு பனிபொழியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க், நியூஜெர்ஸி, கனக்டிகட், பென்சில்வேனியா மற்றும் மசாசுசட்ஸில் மழை மற்றும் பனி பொழிவால் 1,710 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே சான்டியால் பல வீடுகள் மின்சாரமின்றி இருக்கையில் ஏதேனாவால் கூடுதல் வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன. சான்டி புயல் தாக்கிய ஒரு வாரத்தில் வந்துள்ள ஏதேனாவால் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ABOOBACKER AMAZON (MSM)

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.