அதிமுக வேட்பாளர் பட்டியல்: எதிர்பாராதவர்க்கு வாய்ப்பு; காத்திருந்தோர்க்கு ஏமாற்றம்
Last Updated :
விழுப்புரம், மார்ச் 17: விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறியுள்ளது. மாவட்டத்தில் எதிர்பார்த்த அதிமுகவினருக்கு கிடைக்காமலும், எதிர்பார்க்காதவர்களுக்கு வாய்ப்பும் கிடைத்துள்ளது. ÷இத்தொகுதியில் திமுக சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி போட்டியிடுவார் என்பது உறுதி என்ற நிலையில், முன்னாள் கல்வியமைச்சர் சி.வி. சண்முகம் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ÷மயிலம் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் விழுப்புரத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருந்த ஏற்கெனவே போட்டியிட்டு தோல்வியடைந்த ஆர். பசுபதிக்கு வாய்ப்பில்லாமல் போனது. ÷விக்கிரவாண்டி: புதிதாக உருவான இந்தத் தொகுதியில் விக்கிரவாண்டி அதிமுக ஒன்றியச் செயலர் சிந்தாமணி வேலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மாவட்டப் பொருளாளர் தொள்ளாமூர் கண்ணன், தொகுதி பொறுப்பாளர் பூங்குன்றம் ரங்கநாதன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ÷உளுந்தூர்பேட்டை: அதிமுக மாவட்ட செயலரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான குமரகுரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஜி. ஞானமூர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ÷சங்கராபுரம்: முன்னாள் அமைச்சர் ப. மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.சி. பரமசிவம், சி. ராமசாமி, கோமுகி சுப்பிரமணியன், கலியதீர்த்தன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ÷கள்ளக்குறிச்சி (தனி): கள்ளக்குறிச்சி நகர்மன்றத் தலைவர் அழகுவேல் பாபு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ÷திண்டிவனம் (தனி): புதிதாக தனித்தொகுதியாக மாறிய இந்தத் தொகுதியில் மாவட்ட மருத்துவர் அணி இணைச் செயலர் டாக்டர் ஹரிதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தனித் தொகுதி என்பதால், இந்தத் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார். ÷மயிலம்: புதிதாக உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் சி.வி. சண்முகம் போட்டியிடுவார் என்றே நூறு சதவீதம் நம்பப்பட்டது. ஆனால் அவருக்குப் பதிலாக மயிலம் ஒன்றிய செயலர் நாகராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ÷செஞ்சி: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வெ. ஏழுமலை, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி. ரங்கநாதன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.÷வானூர், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஆகிய தொகுகளுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதில் திருக்கோவிலூர் தொகுதியில் தேமுதிக போட்டியிடும் என்று தெரிகிறது. ரிஷிவந்தியத்தில் தேமுதிக அல்லது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இவர் அந்த தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அந்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.