இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link
A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Monday, March 14, 2011

திமுக வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு

திமுக வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு
 
சென்னை, மார்ச்.14: தமிழக பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளது.கட்சித் தலைவர் கருணாநிதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பேரவைத் தேர்தலில் 120 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் 63 தொகுதிகளிலும், பாமக 30 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திமுக 121 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கருணாநிதி கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்பிறகு நாடார் சமுதாயத்தின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு இடத்தை ஒதுக்கினார். இதனால் திமுகவுக்கான தொகுதிகள் 120 ஆகக் குறைந்தது.மார்ச் 18-ம் தேதி திமுக தலைமையகத்தில் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்தநாள் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.