இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link
A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Monday, March 14, 2011

ரஜினி - சோ திடீர் சந்திப்பு-அதிமுக கூட்டணிக்கு ஆதரவு?

ரஜினி - சோ திடீர் சந்திப்பு-அதிமுக கூட்டணிக்கு ஆதரவு?

Cho and Rajini


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை ரகசியமாக சந்தித்துப் பேசினார் பத்திரிகையாளரும், அதிமுக கூட்டணியின் அறிவிக்கப்படாத அரசியல் தூதுவர் என வர்ணிக்கப்படுபவருமான துக்ளக் சோ.

அதிமுகவுக்கு ஆதரவான சக்திகளை திரட்டும் வேலையில் சோ உள்ளிட்ட சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது ஆலோசனையைத்தான் தற்போது ஜெயலலிதா மிக மிக அதிகமாக கேட்கிறார், நம்புகிறார், செயல்படுகிறார். இந்த சோ மாதிரியானவர்கள் யோசனைப்படிதான் அவர் மதிமுக , இடதுசாரிகளை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சோ ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசியுள்ளார்.

1996-க்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் ரஜினி ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழும். அவர் யாருக்கு வாய்ஸ் கொடுக்கப் போகிறார் என்பதை ஒரு கட்டாயக் கேள்வியாகவே மாற்றி விட்டனர். அவர் அரசியலுக்கு வருவார் என்று இன்னும் அவரது ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், தனக்கு அரசியல் ஆசை இல்லை என்பதை அவர் சூசகமாகக் கூறி வருகிறார். தொடர்ந்து சினிமாவில் கோலோச்சுவதே அவரது விருப்பமாகவும் உள்ளது.

வழக்கம் போல இந்த முறையும் தமிழக சட்டசபைத் தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு? என்ற கேள்வியை எழுந்துள்ளது.

இதற்குக் காரணம் சமீபத்தில் நடந்த ஒரு சந்திப்பு. ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் துக்ளக் ஆசிரியர் சோ சந்தித்துப் பேசியுள்ளார். அவர்கள் இருவரும் சுமார் 1 மணி நேரம் இன்றைய நிலவரம், கூட்டணிகள், யாருக்கு ஆதரவு தரவேண்டும் என்பது குறித்தெல்லாம் பேசியதாகக் கூறப்படுகிறது.

சந்திப்பு முடிந்த பிறகு ரஜினியும், சோவும் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தனியாகவே சென்றனர். அவர்கள் எங்கு சென்றனர்? யாரை சந்தித்துப் பேசினார்கள்? என்ற விவரம் மர்மமாகவே உள்ளது.

இன்னும் சில தினங்களில் தமிழக அரசியல் பிரசாரம் சூடு பிடிக்கும் போது ரஜினி தனது கருத்தை வெளியிடுவார் என்றும் கூறுகிறார்கள்.

இதுகுறித்து சோவிடம் கேட்ட போது, "இதுபற்றி எதுவும் சொல்வதற்கில்லை. ரஜினியின் முடிவு குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் இப்போதைக்கு சொல்ல இயலாது" என்றார் சோ.

அ.தி.மு.க அணியில் விஜயகாந்தின் தே.மு.தி. க.வை இடம் பெற செய்ததில் சோ முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் ரஜினியைச் சந்தித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.