இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link
A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Tuesday, March 22, 2011

பணத்திற்கு பதில் பரிந்துரை கடிதம்: தி.மு.க., புது டெக்னிக்

பணத்திற்கு பதில் பரிந்துரை கடிதம்: தி.மு.க., புது டெக்னிக்
      
தொடர்புடையவை

கீழக்கரை:தேர்தல் கமிஷன் கெடுபிடி நடவடிக்கையால், கிராம மக்கள் கோரும் வளர்ச்சிப் பணிக்காக, தி.மு.க.,வினர் எம்.பி., பரிந்துரை கடிதம் மூலம் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

தேர்தல் கமிஷன் கெடுபிடியால், வாக்காளர்களை, "கவர' முடியாத நிலையில் உள்ள தி.மு.க.,வினர், தற்போது புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். தேர்தலுக்கு பின், தொகுதி பக்கமே தலைகாட்டாத எம்.பி.,க்கள், தற்போது, லெட்டர்பேடு சகிதமாக வேட்பாளருடன் வலம் வர துவங்கி உள்ளனர்.தொகுதி நல மேம்பாடு நிதியாக எம்.பி.,க்களுக்கு இரண்டு கோடி ரூபாய் உள்ளது. இது, சமீபத்தில் ஐந்து கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம், "அதை செய்வோம், இதை செய்வோம்...' என, ஊர் முக்கிய பிரமுகர்களிடம் கூறி, ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

தி.மு.க., வேட்பாளர்கள், ஊராட்சிகளுக்கு நேரடியாக சென்று இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ நிர்வாகிகளை சந்தித்து, நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னையை கேட்டு அவற்றை தீர்ப்பதாகவும், இதற்கு எம்.பி., நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பரிந்துரை கடிதத்தையும் எம்.பி., மூலம் வழங்குகின்றனர்.இது போன்ற கடிதம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் பரவலாக வழங்கப்படுகிறது.சொந்த ஊரில் நடைபெற உள்ள வளர்ச்சிப் பணியை தடுத்தால், கிராம மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் எனக் கருதி, அ.தி.மு.க., கூட்டணியினரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.